செய்திகள்
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொலை மிரட்டல்: எடியூரப்பாவுக்கு டி.கே.சிவக்குமார் கடிதம்
மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது மகனும், முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு :
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது மகனும், முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து, கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மட்டுமின்றி, நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். மாநில, மத்திய மந்திரியாக பணியாற்றியவர். அத்தகைய தலைவருக்கு வந்துள்ள கொலை மிரட்டலை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தீவிர விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அவரது மகனும், முன்னாள் மந்திரியுமான பிரியங்க் கார்கே ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக எடுத்து, கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மட்டுமின்றி, நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். மாநில, மத்திய மந்திரியாக பணியாற்றியவர். அத்தகைய தலைவருக்கு வந்துள்ள கொலை மிரட்டலை அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தீவிர விசாரணை நடத்தி கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.