செய்திகள்
ராகுல் காந்தி

சீனாவுடன் எல்லை பிரச்சினையில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?: ராகுல் காந்தி கேள்வி

Published On 2020-06-11 03:24 GMT   |   Update On 2020-06-11 03:24 GMT
சீன படைகள் லாடாக் எல்லைக்குள் புகுந்து இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி உள்ளதாகவும், ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
புதுடெல்லி :

லடாக் எல்லை பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், சீன படைகள் லாடாக் எல்லைக்குள் புகுந்து இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி உள்ளதாகவும், ஆனால் இதுபற்றி பிரதமர் மோடி எதுவும் கூறாமல் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒட்டுமொத்த கல்வான் பள்ளத்தாக்கையும், பங்கோங் சோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் சீனா உரிமை கோரியதாக வெளியான கட்டுரை ஒன்றையும் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, லடாக் பிராந்தியத்தில் இந்திய நிலப்பகுதியை சீனா எடுத்துக் கொண்டு உள்ளதா? என்பது பற்றி மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Tags:    

Similar News