செய்திகள்
தேவேகவுடா மாநிலங்களவைக்கு செல்வது கடவுளின் விருப்பம்: குமாரசாமி
தேவேகவுடா அனுபவத்தின் அடிப்படையில் மாநிலங்களவைக்கு செல்கிறார். இது கடவுளின் விருப்பம் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறிள்ளார்.
ராமநகர் :
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவேகவுடா தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று கடந்த 2019-ம் ஆண்டு முடிவு எடுத்துவிட்டார். ஆனால் கட்சியின் வற்புறுத்தலை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் துமகூருவில் போட்டியிட்டார். ஆனால் அந்த தொகுதி மக்கள் அவரை தோற்கடித்தனர்.
இப்போது அவர் அனுபவத்தின் அடிப்படையில் மாநிலங்களவைக்கு செல்கிறார். இது கடவுளின் விருப்பம். கர்நாடகத்தின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் முன்பு தைரியமாக பேச வேண்டிய நிலை உள்ளது. அதனால் மாநிலங்களவைக்கு தேவகவுடா செல்கிறார்.
இதில் வேறு நோக்கம் எதுவும் இல்லை. நாங்கள் வெற்றி பெற்றுவிட்டால், பெருமிதம் கொள்வதும், தோல்வி அடைந்தால், சோர்வடைந்து அமர்ந்துவிடுவதும் இல்லை. எங்கள் குடும்பம் எப்போதும் மக்களுக்காக சேவையாற்றி வருகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேவேகவுடா தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று கடந்த 2019-ம் ஆண்டு முடிவு எடுத்துவிட்டார். ஆனால் கட்சியின் வற்புறுத்தலை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் துமகூருவில் போட்டியிட்டார். ஆனால் அந்த தொகுதி மக்கள் அவரை தோற்கடித்தனர்.
இப்போது அவர் அனுபவத்தின் அடிப்படையில் மாநிலங்களவைக்கு செல்கிறார். இது கடவுளின் விருப்பம். கர்நாடகத்தின் பிரச்சினைகள் குறித்து பிரதமர் முன்பு தைரியமாக பேச வேண்டிய நிலை உள்ளது. அதனால் மாநிலங்களவைக்கு தேவகவுடா செல்கிறார்.
இதில் வேறு நோக்கம் எதுவும் இல்லை. நாங்கள் வெற்றி பெற்றுவிட்டால், பெருமிதம் கொள்வதும், தோல்வி அடைந்தால், சோர்வடைந்து அமர்ந்துவிடுவதும் இல்லை. எங்கள் குடும்பம் எப்போதும் மக்களுக்காக சேவையாற்றி வருகிறது.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.