செய்திகள்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-06-09 04:58 GMT   |   Update On 2020-06-09 04:58 GMT
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையத்து, அவருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
புதுடெல்லி:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று முன்தினம் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்டது. இது கொரோனாவுக்கான அறிகுறியாக இருக்கலாம் என கருதி, அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன், தனது நிகழ்ச்சிகள் மற்றும் சந்திப்புகள் அனைத்தையும் ரத்து செய்தார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை காலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 29 ஆயிரத்து 943  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 874 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News