செய்திகள்
டெல்லியில் மதுபானம் மீதான கொரோனா சிறப்பு கட்டணம் ரத்து

மதுபானம் மீதான சிறப்பு கொரோனா கட்டணத்தை திரும்பப்பெற்றது டெல்லி அரசு

Published On 2020-06-07 08:40 GMT   |   Update On 2020-06-07 08:40 GMT
கடும் நிதி பற்றாக்குறையால் மதுபான்ம மீது டெல்லி அரசு விதித்திருந்த சிறப்பு கொரோனா கட்டணத்தை தற்போது திரும்ப பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் தீவிரம் காட்டிய நிலையிலும், மத்திய அரசு போதுமான அளவு நிதி கொடுத்து உதவவில்லை. இதனால் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட பின்னர் மாநில அரசுகள் மாதுபானத்திற்கான வரியை உயர்த்தின.

டெல்லி அரசு ‘சிறப்பு கொரோனா கட்டணம்’ என ஒரு குறிப்பிட்ட தொகையை (சுமார் 70 சதவீதம்) விதித்தது.

இந்நிலையில் தற்போது அந்த சிறப்புப் கட்டணத்தை திரும்ப பெற்றுள்ளது. அதேவேளையில் வாட்வரியை 20 சதவிகிதத்தில் 25 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
Tags:    

Similar News