செய்திகள்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் ராக்கெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு

Published On 2020-06-06 17:28 GMT   |   Update On 2020-06-06 17:28 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,739 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 120 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுடெல்லி:

மகாராஷ்டிராவில் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக கடந்த மாதத்தில் இருந்து இங்கு நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

மகாராஷ்டிராவில் இன்று 2,739 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 82,968 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில்  கொரோனா தாக்கி 120 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானோர் எண்ணிக்கை 2,969 ஆக உயர்ந்துள்ளது.



கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 37,390 பேர் குணமடைந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News