செய்திகள்
நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் (கோப்பு படம்)

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும்- மத்திய அரசு

Published On 2020-06-06 10:03 GMT   |   Update On 2020-06-06 10:03 GMT
ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதில், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்லும் தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என்றும் சாலையில் நடந்து செல்லும் தொழிலாளர்களை அருகில் உள்ள ரெயில் நிலையத்திற்கு செல்ல போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழிலாளர்களுக்கு குடிநீர், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக தரப்படுவதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News