செய்திகள்
கொரோனா வைரஸ்

டெல்லியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்தது

Published On 2020-06-04 19:50 GMT   |   Update On 2020-06-04 19:50 GMT
தலைநகர் டெல்லியில் நேற்று 1359 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 1,359 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25,004 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 650 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News