செய்திகள்
முதல் மந்திரி பினராயி விஜயன்

கேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-06-04 17:43 GMT   |   Update On 2020-06-04 17:43 GMT
கேரளாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பும் நபர்களால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் புதிதாக மேலும் 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள செய்தியில், மாநிலத்தில் மேலும் 94 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1588 ஆக அதிகரித்துள்ளது.

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 47 பயணிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது கேரளத்தில் 854 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News