செய்திகள்
சோதனை செய்யும் ஊழியர்

டெல்லியை மிரட்டும் கொரோனா - பலி எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

Published On 2020-06-03 19:09 GMT   |   Update On 2020-06-03 19:09 GMT
தலைநகர் டெல்லியில் நேற்று 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு பலி எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது.
புதுடெல்லி:

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று மேலும் 1,513 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,645 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 606 ஆக உயர்ந்துள்ளது என டெல்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News