செய்திகள்
டெல்லி, சத்தீஸ்கார், மணிப்பூருக்கு பாஜக தலைவர்கள் புதிதாக நியமனம்
டெல்லி மாநில பாஜக புதிய தலைவராக ஆதேஷ்குமார் குப்தாவும், மணிப்பூர் மாநில பாஜக புதிய தலைவராக திகேந்திரசிங்கும், சத்தீஸ்கார் மாநில பாஜக புதிய தலைவராக முன்னாள் மத்திய மந்திரி விஷ்ணு தியோ சாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி :
டெல்லி பா.ஜனதா தலைவராக இருந்த மனோஜ் திவாரி எம்.பி., டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக விருப்பம் தெரிவித்து இருந்தார். அவரது பதவிக்காலமும் முடிவடைந்தது.
இந்நிலையில், அம்மாநில பா.ஜனதா புதிய தலைவராக ஆதேஷ்குமார் குப்தா நேற்று நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு டெல்லி முன்னாள் மேயர் ஆவார்.
சத்தீஸ்கார் மாநில பா.ஜனதா புதிய தலைவராக, விக்ரம் உசேன்டிக்கு பதிலாக, முன்னாள் மத்திய மந்திரி விஷ்ணு தியோ சாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பழங்குடியின தலைவர் ஆவார்.
மணிப்பூர் மாநில பா.ஜனதா புதிய தலைவராக திகேந்திரசிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி பா.ஜனதா தலைவராக இருந்த மனோஜ் திவாரி எம்.பி., டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக விருப்பம் தெரிவித்து இருந்தார். அவரது பதவிக்காலமும் முடிவடைந்தது.
இந்நிலையில், அம்மாநில பா.ஜனதா புதிய தலைவராக ஆதேஷ்குமார் குப்தா நேற்று நியமிக்கப்பட்டார். அவர் வடக்கு டெல்லி முன்னாள் மேயர் ஆவார்.
சத்தீஸ்கார் மாநில பா.ஜனதா புதிய தலைவராக, விக்ரம் உசேன்டிக்கு பதிலாக, முன்னாள் மத்திய மந்திரி விஷ்ணு தியோ சாய் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பழங்குடியின தலைவர் ஆவார்.
மணிப்பூர் மாநில பா.ஜனதா புதிய தலைவராக திகேந்திரசிங் நியமிக்கப்பட்டுள்ளார்.