செய்திகள்
தெர்மர் ஸ்கிரீன் செய்யப்படும் காட்சி (பழைய படம்)

கேரளாவில் இன்று 57 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

Published On 2020-06-01 13:21 GMT   |   Update On 2020-06-01 13:21 GMT
கேரளாவில் இன்று 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேரளா அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டது. இதனால் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒற்றை இலக்க எண்ணுக்குள் கொண்டு வந்தது.

இந்நிலையில்தான் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் உள்ளவர்கள் கேரளா திரும்பி வருகின்றனர். இதனால் மீண்டும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இன்று 57 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1326 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News