செய்திகள்
இரு நாட்டு கொடிகள்

உளவு பார்த்த விவகாரம் - பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 24 மணி நேரத்தில் வெளியேற உத்தரவு

Published On 2020-05-31 19:38 GMT   |   Update On 2020-05-31 19:38 GMT
பாகிஸ்தானின் உளவு அமைப்புக்காக இந்தியாவை உளவு பார்த்த தூதரக ஊழியர்கள் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான்.

இவர்களது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்காக உளவு பார்த்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, இன்று இவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர்.
Tags:    

Similar News