செய்திகள்
டெல்லி, கர்நாடகா, கேரளாவிலும் விஸ்வரூபம் எடுத்த கொரோனா தொற்று
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று ஒரு நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் முக்கியமான நகரங்களில் கடந்த ஒரு மாத காலமாக கொரேனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழத்தில் இன்று ஒரே நாளில் முதல்முறையாக 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியிலும் 1,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் இன்று மேலும் 299 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 3,221 ஆக உயர்ந்துள்ளது. 51 பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 20 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 37 பேரும் இதில் அடங்குவர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
தமிழத்தில் இன்று ஒரே நாளில் முதல்முறையாக 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லியிலும் 1,295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 20 பேரும், வெளிமாநிலத்தில் இருந்து வந்த 37 பேரும் இதில் அடங்குவர் என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.