செய்திகள்
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது

Published On 2020-05-31 04:49 GMT   |   Update On 2020-05-31 04:49 GMT
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 193 உயிரிழந்ததால் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 164 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 5,164 உயர்ந்துள்ளது.

தற்போது மருத்துவமனைகளில் 89,995 சிகிச்சை பெற்று வரும் நிலையில், 86,984 குணமடைந்துள்ளனர். இந்த தகவலை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News