செய்திகள்
ஏர் இந்தியா

இந்தியர்களை அழைத்துவர 6 நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கம்

Published On 2020-05-29 23:36 GMT   |   Update On 2020-05-29 23:36 GMT
அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட மேலும் 6 நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
புதுடெல்லி:

கொரோனாபரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
 
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர ‘வந்தே பாரத்’ திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இரண்டாம் கட்ட பணி கடந்த 16-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதிவரை அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுவீடன், ஜெர்மனி, தென்கொரியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு கூடுதலாக மீட்பு விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.
Tags:    

Similar News