செய்திகள்
வானிலை நிலவரம்

கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை

Published On 2020-05-29 06:07 GMT   |   Update On 2020-05-29 06:07 GMT
கேரளாவில் ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:

தென்கிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 31-ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி வருவாக வாய்ப்பு இருப்பதால் கேரளா மற்றும் தென் இந்தியாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந்தேதி தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே மத்திய மேற்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஏமனை நோக்கி நகரும் என்பதால் மத்திய கிழக்கு மற்றும்ட வடமேற்கு தென்கிழக்கு அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News