செய்திகள்
அமித் ஷா

மாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு

Published On 2020-05-28 16:54 GMT   |   Update On 2020-05-28 16:54 GMT
4-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், மாநில முதல்-அமைச்சர்களுடன் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேசியுள்ளார்.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற செய்தி உலா வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 நகரங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்த வாய்ப்பில்லை. மற்ற இடங்களுக்கு இன்னும் தளர்வு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் ஊரடங்கு இரண்டு வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என்ற நிலையில், மத்திய உள்துறை மத்திரி அமித் ஷா இன்று அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் பேசியுள்ளார்.

அப்போது ஊரடங்கு உத்தரவு குறித்து தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் என்று அமித் ஷா கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News