செய்திகள்
கொரோனா பரிசோதனை (பழைய படம்)

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா: டெல்லியில் 1,024 பேர்

Published On 2020-05-28 16:02 GMT   |   Update On 2020-05-28 16:02 GMT
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 2,598 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 1,024 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் இன்று 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 59,546 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 85 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 1982 ஆக உயர்ந்துள்ளது.



டெல்லியில் கடந்த சில தினங்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இந்நிலையில் இன்று 1,024 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 16,281 ஆக அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News