செய்திகள்
மாயாவதி

மத்திய-மகாராஷ்டிரா மாநில அரசுகள் மோதலை நிறுத்த வேண்டும்: மாயாவதி வலியுறுத்தல்

Published On 2020-05-28 03:25 GMT   |   Update On 2020-05-28 03:25 GMT
மத்திய அரசு-மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான மோதலால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
லக்னோ :

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு-மகாராஷ்டிரா மாநில அரசு இடையிலான மோதலால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எந்த அரசானாலும், தொழிலாளர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுவது துரதிரு‌‌ஷ்டவசமானது.

எனவே, இரு அரசுகளும் மோதலை நிறுத்திவிட்டு, தொழிலாளர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News