செய்திகள்
சி.ஐ.எஸ்.எப். வீரர் - கோப்புப்படம்

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் மேலும் 20 வீரர்களுக்கு கொரோனா உறுதி

Published On 2020-05-27 15:12 GMT   |   Update On 2020-05-27 15:12 GMT
மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி:

மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) வீரர்கள் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 18 பேர் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆவார்கள். மற்ற இருவரும் இமாசல பிரதேசத்தில் உள்ள நீர் மின்நிலையம் மற்றும் சண்டிகரில் உள்ள பஞ்சாப்-அரியானா மாநிலங்களின் தலைமை செயலகத்தில் பணியில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. மத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையை சேர்ந்த 132 வீரர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்ட நிலையில், 78 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த படையில் 3 வீரர்களின் உயிரை கொரோனா பறித்துள்ளது. 
Tags:    

Similar News