செய்திகள்
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சத்தை தாண்டியது- 4337 பேர் மரணம்

Published On 2020-05-27 04:00 GMT   |   Update On 2020-05-27 04:00 GMT
இந்தியாவில் கொரோனா வைரசால் 1.51 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4337 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 151767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4337 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64426 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.



நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 54758 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 17728 பேருக்கும், குஜராத்தில் 14821 பேருக்கும், டெல்லியில் 14465 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News