செய்திகள்
எடியூரப்பா

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயண செலவை அரசே ஏற்கும்: எடியூரப்பா

Published On 2020-05-23 03:14 GMT   |   Update On 2020-05-23 03:14 GMT
கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் சிரமிக் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு :

கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார்கள். அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பயண கட்டணத்தில் மத்திய அரசு 85 சதவீதத்தை ஏற்றுக்கொள்கிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கர்நாடகத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற காரணங்களுக்காக வந்துள்ளவர்கள் சிரமிக் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதற்கான செலவை மாநில அரசே ஏற்கும்“ என்றார்.

முதல்-மந்திரி எடியூரப்பாவின் இந்த முடிவை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வரவேற்றுள்ளார். காங்கிரஸ் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக முதல்-மந்திரிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News