செய்திகள்
மீட்பு பணி நடைபெறும் காட்சி

பீகாரில் பேருந்துடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி- 9 தொழிலாளர்கள் பலி

Published On 2020-05-19 05:04 GMT   |   Update On 2020-05-19 05:04 GMT
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் பேருந்துடன் மோதிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
பாட்னா:

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நவ்கச்சியா பகுதியில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலை ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்துகொண்டிருந்த பேருந்துடன் லாரி எதிர்பாராத விதமாக மோதியது.

மோதிய வேகத்தில் லாரி நிலைகுலைந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 9 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் மகாராஷ்டிராவின் யாவத்மால் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 3 பேர் மற்றும் பேருந்து டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர். 
Tags:    

Similar News