செய்திகள்
கர்நாடகத்தில் 17-ந்தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கு தளர்வு: எடியூரப்பா சூசக தகவல்
கர்நாடகத்தில் 17-ந் தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கு தளர்வு இருக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா சூசகமாக கூறினார்.
பெங்களூரு :
கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவை தடுக்க ஊரடங்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்த பொது ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட உள்ளதாக கூறினார். இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 17-ந் தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தும் என்று சூசகமாக கூறினார். இதுகுறித்து எடியுரப்பா கூறியதாவது:-
17-ந் தேதிக்கு (நாளை) பிறகு ஊரடங்கை மத்திய அரசு தளர்த்த உள்ளது. அதுவரை காத்திருப்போம். எனக்கு இருக்கிற தகவல்படி, அனைத்து நிலையிலும் ஊரடங்கு தளர்த்தப்படும். 5 நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட சில துறைகளுக்கு தடை நீடிக்கலாம். மற்ற அனைத்து விஷயங்களும் செயல்பட அனுமதி கிடைக்கும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவை தடுக்க ஊரடங்கு கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அமலில் உள்ளது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, இந்த பொது ஊரடங்கு 4-வது கட்டமாக நீட்டிக்கப்பட உள்ளதாக கூறினார். இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று (சனிக்கிழமை) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவிடம் பெங்களூருவில் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 17-ந் தேதிக்கு பிறகு மேலும் ஊரடங்கை மத்திய அரசு தளர்த்தும் என்று சூசகமாக கூறினார். இதுகுறித்து எடியுரப்பா கூறியதாவது:-
17-ந் தேதிக்கு (நாளை) பிறகு ஊரடங்கை மத்திய அரசு தளர்த்த உள்ளது. அதுவரை காத்திருப்போம். எனக்கு இருக்கிற தகவல்படி, அனைத்து நிலையிலும் ஊரடங்கு தளர்த்தப்படும். 5 நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட சில துறைகளுக்கு தடை நீடிக்கலாம். மற்ற அனைத்து விஷயங்களும் செயல்பட அனுமதி கிடைக்கும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.