செய்திகள்
சொந்த ஊருக்கு செல்ல தொழிலாளர்கள் உயிரை பணயம் வைக்க கூடாது: அஜித் பவார்
சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யும் வரை தொழிலாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பயணம் செய்து உயிரை பணயம் வைக்க கூடாது என்று அஜித் பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மும்பை :
அவுரங்காபாத் அருகே நேற்று சொந்த ஊருக்கு நடந்து சென்ற போது, தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 16 மத்திய பிரதேச தொழிலாளர்கள் சரக்கு ரெயில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியிருப்பதாவது:-
இந்த சம்பவம் வலிமிகுந்தது. தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து மகாராஷ்டிராவில் இருந்து இதுபோன்று சொந்த மாநிலத்திற்கு செல்வது வேதனை அளிக்கிறது. சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யும் வரை தொழிலாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பயணம் செய்து உயிரை பணயம் வைக்க கூடாது. எல்லோரும் படிப்படியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவசரப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவுரங்காபாத் அருகே நேற்று சொந்த ஊருக்கு நடந்து சென்ற போது, தண்டவாளத்தில் படுத்து தூங்கிய 16 மத்திய பிரதேச தொழிலாளர்கள் சரக்கு ரெயில் ஏறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து துணை முதல்-மந்திரி அஜித் பவார் கூறியிருப்பதாவது:-
இந்த சம்பவம் வலிமிகுந்தது. தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து மகாராஷ்டிராவில் இருந்து இதுபோன்று சொந்த மாநிலத்திற்கு செல்வது வேதனை அளிக்கிறது. சொந்த ஊர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யும் வரை தொழிலாளர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்கள் பயணம் செய்து உயிரை பணயம் வைக்க கூடாது. எல்லோரும் படிப்படியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவசரப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.