செய்திகள்
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது- மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்

Published On 2020-05-06 22:15 GMT   |   Update On 2020-05-06 22:15 GMT
ஆரோக்கிய சேது செயலி பாதுகாப்பானது என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை கண்காணிக்க ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 
கொரோனா வைரஸ் தொற்று உடையவர்களுடன் நாம் தொடர்பில் இருந்தோமா என்ற விவரத்தை இந்த செயலி தெரிவிக்கும். அதன்மூலம் முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இதற்கிடையே, மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கிய சேது என்ற இந்த செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், தனியுரிமை மீறப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்நிலையில், ஆரோக்கிய சேது செயலி மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ரவிசங்கர் பிரசாத் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஆரோக்கிய சேது செயலி இந்தியாவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கண்டுபிடிப்பாகும். கொரோனாவுக்கு எதிரான போருக்கு உதவும் பொறுப்பு மிக்க  செயலியாக உள்ளது.  இது மிகவும் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பை கொண்டதாகும்.  தனி நபர்களின் தரவுகளை பாதுகாப்பதில் மிகவும் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News