செய்திகள்
ஜம்மு காஷ்மீர் - சோபியான் என்கவுண்டரில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் மேலும் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள மெலஹுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினரை கண்டதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
இந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 3 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.