செய்திகள்
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம்

மியூச்சுவல் பண்ட் கடனுதவி - ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு ப.சிதம்பரம் வரவேற்பு

Published On 2020-04-28 09:32 GMT   |   Update On 2020-04-28 10:09 GMT
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பதாக கூறிய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், தனது 6 பண்ட் திட்டங்களை நிறுத்திவிட்டது. இதனால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.



இதற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ரிசர்வ் வங்கி அறிவிப்பை நான் வரவேற்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்த கவலைகளையும், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு விடுத்த வேண்டுகோளையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News