செய்திகள்
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாக்பூர்:
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ (இருதயத்தில் உள்ள அடைப்பினை நீக்கும் சிகிச்சை) செய்து கொண்டதாக அவருடைய உதவியாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
அவருடைய உடல் நலம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் அவர் கூறினார்.
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 20-ந் தேதி ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ (இருதயத்தில் உள்ள அடைப்பினை நீக்கும் சிகிச்சை) செய்து கொண்டதாக அவருடைய உதவியாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.
அவருடைய உடல் நலம் குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் அவர் கூறினார்.