செய்திகள்
ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்- உ.பி. அரசு உத்தரவு
ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தீவிரமாக பரவும் அபாயம் உள்ள பகுதிகளில், அந்தந்த மாநில சூழ்நிலைகளுக்கு ஏற்ப முழு ஊரடங்கு விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஜூன் 30 வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என உ.பி.அரசு கூறி உள்ளது.
ஜூன் 30ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சூழ்நிலையை பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்.