செய்திகள்
ப சிதம்பரம்

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் - ப.சிதம்பரம் கோரிக்கை

Published On 2020-04-25 05:35 GMT   |   Update On 2020-04-25 05:35 GMT
மே 3-ந் தேதிக்கு பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டும் என ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி:

மே 3-ந் தேதி நாடு தழுவிய ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், வெளிமாநில தொழிலாளர்களை கடுமையான சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கேட்டுக்கொண்டு உள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று குடும்பத்தினரை சந்திப்பதிலும், தங்கள் மொழி பேசும் மக்களுடன் கலந்துரையாடுவதிலும் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும், ஊரடங்கு என்ற பெயரில் அவர்களுடைய இந்த ஆவலை நீண்ட நாட்கள் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
Tags:    

Similar News