செய்திகள்
சுகாதாரத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால்

இந்தியாவின் 78 மாவட்டங்களில் கடந்த 14 நாளில் கொரோனா தொற்று இல்லை - சுகாதாரத் துறை

Published On 2020-04-23 11:22 GMT   |   Update On 2020-04-23 11:22 GMT
இந்தியாவில் உள்ள 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத் துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள 78 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 1409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

Tags:    

Similar News