செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவால்

மக்களின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் - அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2020-04-19 07:36 GMT   |   Update On 2020-04-19 07:36 GMT
மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் ஊரடங்கில் தளர்வளிக்க முடியாது என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெல்லியில் கொரோனாவுக்கு மையப்புள்ளியாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கில் எந்த தளர்வும் அளிக்க முடியாது.

நேற்று கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 186 பேருக்கும் எந்த அறிகுறியும் தென்படாதது கவலை அளிக்கிறது.

டெல்லியில் தொடர்ந்து கொரோனா பரவினாலும் கட்டுக்குள் உள்ளது. இதனால் யாரும் அச்சமடைய தேவையில்லை.

டெல்லி மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். இதனால் ஊரடங்கில் தளர்வு அளிக்க முடியாது. ஒரு வாரத்திற்கு மீண்டும் ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News