செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 3 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம்
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் அவர்கள் மீது குண்டுகள் வீசியும், துப்பாக்கியால் சுட்டும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது என சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் தெரிவித்தனர்.