செய்திகள்
பறவைகள், நாய்கள், பூனைகளுக்கு உணவளிக்க எடியூரப்பா வேண்டுகோள்
இந்த நெருக்கடியான தருணத்தில் பொதுமக்கள் தங்களை சுற்றியுள்ள தெருக்களில் சுற்றும் தெருநாய்கள், பூனைகள் மற்றும் பறவைகளிடம் சிறிது கருணை காட்ட வேண்டும் என்று எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவால் ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே வேளையில் குரங்குகள், தெருநாய்கள் உள்ளிட்டவையும் உணவின்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நெருக்கடியான தருணத்தில் பொதுமக்கள் தங்களை சுற்றியுள்ள தெருக்களில் சுற்றும் தெருநாய்கள், பூனைகள் மற்றும் பறவைகளிடம் சிறிது கருணை காட்ட வேண்டும். அவற்றுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி பசியை போக்குங்கள். அவைகளை பசியோ விட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் அவர் தனது வீட்டு வளாகத்தில் பூனைக்கு பால் வழங்குவது போன்ற ஒரு படத்தையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த நெருக்கடியான தருணத்தில் பொதுமக்கள் தங்களை சுற்றியுள்ள தெருக்களில் சுற்றும் தெருநாய்கள், பூனைகள் மற்றும் பறவைகளிடம் சிறிது கருணை காட்ட வேண்டும். அவற்றுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கி பசியை போக்குங்கள். அவைகளை பசியோ விட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பதிவில் அவர் தனது வீட்டு வளாகத்தில் பூனைக்கு பால் வழங்குவது போன்ற ஒரு படத்தையும் இணைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.