செய்திகள்
கொரோனா வைரஸ்

மும்பையை மிரட்டும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியது

Published On 2020-04-10 13:46 GMT   |   Update On 2020-04-10 13:46 GMT
மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 516 ஆனது.

இந்நிலையில், மகாராஷ்டிராவின் மும்பையில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மும்பையில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மும்பையில் ஒரே நாளில் இன்று 218 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 10 பேர் பலியாகினர். 

இதன்மூலம் மும்பையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 993 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது என மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது. 

மும்பை பகுதியில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News