செய்திகள்
கோப்பு படம்.

பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Published On 2020-04-10 12:09 GMT   |   Update On 2020-04-10 12:09 GMT
பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சண்டிகர்:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
 
கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News