செய்திகள்
மும்பை- தாராவியில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
மகாராஷ்டிராவின் மும்பை தாராவி பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 865 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 169 அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 478 ஆனது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராவி பகுதியை சேர்ந்த 3 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இங்கு கொரோனா வைரஸ் தாக்கி 3 பேர் பலியாகி உள்ளனர் எனவும் மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தாராவி பகுதியில் தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.