செய்திகள்
பிரதமர் மோடி

அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி 11ம் தேதி மீண்டும் கலந்துரையாடல்

Published On 2020-04-08 11:23 GMT   |   Update On 2020-04-08 11:23 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி வரும் 11ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, கொரோனா வைரஸ் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடன் பிரதமர் மோடி கடந்த 2-ம் தேதி வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News