செய்திகள்
பிரதமர் மோடி

கொரோனா தடுப்பு நடவடிக்கை - சுவீடன் பிரதமர், ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி உரையாடல்

Published On 2020-04-07 15:48 GMT   |   Update On 2020-04-07 15:48 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுவீடன் பிரதமர் மற்றும் ஓமன் சுல்தானுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுவீடன் பிரதமர் மற்றும் ஓமன் அதிபருடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுவீடன் பிரதமர் ஸ்டெபான் லோப்வென் மற்றும் ஒமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் தைமூர் அல் சையதுடன் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, இந்தியாவி்ல் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள சுகாதார, வர்த்தக ரீதியிலான சவால்களை எதிர்கொள்வது, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் பதிவிட்டுள்ளது.
Tags:    

Similar News