செய்திகள்
நீட் தேர்வு

‘நீட்’ உள்பட நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2020-04-07 10:08 GMT   |   Update On 2020-04-07 10:08 GMT
மருத்துவ கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளின் தேதி தள்ளி வைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ள நிலையில் பள்ளி, கல்லூரித் தேர்வுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தரபிரதேசம், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜே.என்.யு., யு.ஜி.சி. நெட், இக்னோ பி.எச்.டி., பல்கலைக் கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள், ஐ.சி.ஏ.ஆர். உள்ளிட்ட நிர்வாகப் படிப்புகளுக்கான தேர்வுகள் என அனைத்துமே ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்படும். இவை மட்டுமல்லாது மருத்துவ கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளின் தேதி தள்ளி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News