செய்திகள்
மருத்துவமனையில் உள்ள நோயாளிகள்

24 மணி நேரத்தில் 5 பேர் மரணம்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4421 ஆக உயர்வு

Published On 2020-04-07 04:08 GMT   |   Update On 2020-04-07 04:08 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. சமூக தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் கடினமான வாரங்கள். இதைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஏற்கனவே கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் அடுத்தடுத்து வெளிவந்த நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த ஒருவாரமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

நேற்று இரவு நிலவரப்படி இந்தியாவில் 4281 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இன்று காலை வெளியிட்ட தகவலின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. 325 பேர் குணமடைந்துள்ளனர். 
Tags:    

Similar News