செய்திகள்
இந்தியா முழுவதும் வீடுகளில் விளக்குகள் ஏற்றப்பட்டன

இந்தியா முழுவதும் மின்சார லைட்டுகள் அணைக்கப்பட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன

Published On 2020-04-05 15:42 GMT   |   Update On 2020-04-05 15:42 GMT
பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10-வது நாளான கடந்த 3-ந்தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டார்.

அப்போது, ஏப்ரல் 5-ம்தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது வீட்டில் மின்சார லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றினர். சிலர் பட்டாசுகள் வெடித்து ஒற்றுமையாக கொரோனாவை எதிர்கொள்வோம் என்பதை வெளிப்படுத்தினர்.
Tags:    

Similar News