செய்திகள்
மும்பை தாராவி பகுதி

மும்பை- தாராவியில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

Published On 2020-04-04 13:38 GMT   |   Update On 2020-04-04 13:38 GMT
மகாராஷ்டிராவின் மும்பை தாராவி பகுதியில் கொரோனா வைரசால்பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,547 லிருந்து 2,902  ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 184 ஆனது.

தற்போதைய நிலவரப்படி  மகாராஷ்டிரா மாநிலத்தில் 537 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், அம்மாநிலத்தின் தாராவி பகுதியை சேர்ந்த ஆண், பெண் ஒருவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மும்பை தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 
Tags:    

Similar News