செய்திகள்
பிரதமர் மோடி

அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி 8-ம் தேதி கலந்துரையாடுகிறார்

Published On 2020-04-04 12:29 GMT   |   Update On 2020-04-04 12:29 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி 8-ம் தேதி வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகிறார் .
புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து,  அனைத்து நாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.

இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு  உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி 8-ம் தேதி காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடுகிறார் என மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News