செய்திகள்
அஜித்பவார்

கொரோனாவுக்கு உயிரிழக்கும் போலீசார் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம்: அஜித்பவார் அறிவிப்பு

Published On 2020-04-04 03:17 GMT   |   Update On 2020-04-04 03:17 GMT
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் யாரும் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அஜித்பவார் கூறியுள்ளார்.
மும்பை :

கொரோனா பிரச்சினை தொடர்பாக துணை முதல்-மந்திரியும், நிதி மந்திரியுமான அஜித்பவார் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக், சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீசார், சுகாதாரத்துறையினர், மருத்துவ கல்வி துறையினர் உள்ளிட்ட கொரோனாவுக்கு எதிரான போரில் பணியாற்றும் துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் யாரும் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News