செய்திகள்
கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2500 -ஐ தாண்டியது
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனாவுக்கு இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தோர் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிக அளவாக 478 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது எனவும்
தெரிவித்துள்ளது.