செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆந்திராவில் கொரோனாவுக்கு முதல் பலி

Published On 2020-04-03 10:15 GMT   |   Update On 2020-04-03 10:15 GMT
ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்துள்ளார்.
அமராவதி:
   
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்பை தவிர்க்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மதிய நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திராவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த 55 வயதுடைய நபர் கடந்த 30-ம் தேதி இறந்தார். அவரது இறப்புக்கான காரணம் உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது அவர் கொரோனா வைரசால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News