செய்திகள்
கோப்புப்படம்

ஊரடங்கு உத்தரவை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை - மத்திய அரசு

Published On 2020-04-02 14:36 GMT   |   Update On 2020-04-02 14:36 GMT
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த மாதம் 24-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறும் எந்த நபரும் விசாரணைக்கு உட்படுத்தப் படுவார். அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.  இதேபோல், வதந்தி பரப்பினாலும் அபராதத்துடன் கூடிய 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News